Crime

திருப்பத்தூர்: மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரிடம் கைபேசியில் பணம் கேட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூரைச் சேர்ந்த ரங்கநாதன் (59) என்பவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 25 ஆண்டுகளாக திருப்பத்தூரில் உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்யும் நபர் ஒருவரிடம் கைபேசியில் உரையாடிய ரங்கநாதன், அந்த நபர் மது விற்பனை செய்ய தினசரி தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் எனக்கூறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bE1LTuj

Post a Comment

0 Comments