Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடி விபத்து தொடர்பாக, சிலிண்டர் முகவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி, ரவி என்பவரின் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள சிலிண்டர் விற்பனை செய்யும் முகவர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது வெடி விபத்தின் போது ஓட்டலில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள், சிலிண்டர் உள்ளிட்டவை காட்சிப்படுத்தினர். ஓட்டலுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டதா என கேட்டனர். இதற்கு, தாங்கள் அப்பகுதியில் உள்ள முகவரிக்கு சிலிண்டர் விநியோகம் செய்யவில்லை. சிலிண்டர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GCiJrl1

Post a Comment

0 Comments