Crime

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்ததுடன், தப்பி ஓடிய இரண்டு ரவுடிகள் குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் இன்று அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FAEqfuG

Post a Comment

0 Comments