Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீஸார் தீ விபத்து பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரவி என்பவரின் பட்டாசு கிடங்கில் கடந்த 29-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 6 கடைகள் தரைமட்டமாகின. ரவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், தருமபுரி தடயவியல் நிபுணர்களின் அறிக்கையில் சமையல் எரிவாயு கசிவே விபத்துக்குக் காரணம் என தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fImJ0zu

Post a Comment

0 Comments