
மதுராந்தகம்: சென்னை, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள புதிய குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நிகமத்துல்லா. இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இவரது தொழிலின் பங்குதாரரான மகன் அக்பரும் இத்தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமாக, அதேபகுதியில் சர்வே எண் 197/2-ல் உள்ள 3.36 ஏக்கர் நிலத்தை புதிய மனை பிரிவாக விற்பனை செய்ய அக்பர் பொது அதிகாரம் பெற்று விற்பனை செய்துள்ளார். பின்னர், நிகமத்துல்லாவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pXjDnkH
0 Comments