
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 49 வயது மதிக்கத்தக்க நபரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜ லட்சுமி முன்பாக நடந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/73KZ2Tl
0 Comments