Crime

சென்னை: மின்சார ரயிலில் பெண் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்றபோது, அப்பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தவழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை கந்தன்சாவடி, கருணாநிதி சோழன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் மகள் ப்ரீத்தி(22). இவர் கடந்த 2-ம் தேதி மாலை கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்தார். இந்திரா நகர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பட்டபோது, படியில் நின்று கொண்டிருந்த ப்ரீத்தியிடம் இருந்த செல்போனை 2 பேர் பறிக்க முயன்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pVArwcH

Post a Comment

0 Comments