
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட காவல் துறையில் இணையவழி குற்றத் தடுப்பு (சைபர் கிரைம்) பிரிவு இன்று (ஜூலை 20) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் இணையவழி குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காரைக்கால் காவல் துறையில் இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு இல்லாத காரணத்தால், புதுச்சேரியில் உள்ள இப்பிரிவின் மூலம் வழக்குப் பதிவு, விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதனால் காரைக்காலிலேயே இப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jicSoU6
0 Comments