Crime

பொள்ளாச்சி: கமிஷனுக்கு ஆசைப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க சென்ற, கோவை தங்க நகை வியாபாரியிடம் ரூ.1 கோடியே 27 லட்சத்தை வழிப்பறி செய்த கும்பலை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆனைமலை போலீஸார் கூறியதாவது: கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (44). தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வேலை சம்பந்தமாக ஒரு தனியார் வங்கிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு வங்கி மேலாளர் ஒருவர் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் பிரகாசுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். குட்டி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OT2s0tv

Post a Comment

0 Comments