
சென்னை: சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் கடந்த மாதம் 19-ந்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் மனு அளித்தார். அதில், சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷேக்இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து வருவதாக கூறியிருந்தார்.
அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகமது ஷேக் இலியாசை கடந்த மாதம் 20-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zhv9EIk
0 Comments