
தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூர் சுண்டகாட்டு தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் மாடசாமி. கல்லூரி மாணவரான இவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனார். இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
அதே பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு பயன்படுத்தப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக தனது வீட்டை லட்சுமணன் சீரமைத்து வந்தார். வீட்டின் கழிவுநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்தது. புகாரின்பேரில் இலத்தூர் போலீஸார் அங்கு சென்று, எலும்புக்கூடை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Pr5d3If
0 Comments