
மேடவாக்கம்: மேடவாக்கம் அருகே, கட்டாய திருமணம் செய்து வைக்க இருந்த 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேடவாக்கம், முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்களின்‌ 15 வயதான மகள், 10-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் குமாரும், லட்சுமியும், தங்கள் மகளை, துறையூரைச் சேர்ந்த உறவினர் மணிவேல் (26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். புதன்கிழமை (இன்று) காலை, திருமணம் நடக்க இருந்த நிலையில், சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aqQbdPj
0 Comments