
திருச்சி: துறையூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண்ணை கடத்திச் சென்றதை தடுத்த வருவாய் ஆய்வாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு, சட்டவிரோதமாக கிராவல் மண்ணை வெட்டி கடத்திச் செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dzOsgPB
0 Comments