
திருவண்ணாமலை: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த கூலி தொழிலாளிக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்தவர் 10 வயது சிறுமி. இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், தென்முடியனூர் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zP3y4Lg
0 Comments