Crime

சென்னை: 3 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் ரூ.161 கோடிவரை வசூலித்து பண மோசடியில் ஈடுபட்டதாக அம்ரோ கிங்ஸ் நிதி நிறுவனத் தலைவர், இயக்குநரான அவரது மனைவி மற்றொரு இயக்குநர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் அம்ரோ கிங்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் முதலீட்டாளர்களுக்கு மாதம் 10 சதவீதம் லாபம் தருவதாகவும், முதலீடு செய்த தேதியிலிருந்து 22 மாதம் முடிவில் முதலீட்டுத் தொகை முழுவதையும் திரும்ப வழங்கிவிடுவதாகவும் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kQ9UHvT

Post a Comment

0 Comments