
நாகர்கோவில்: பெண்களுடன் பாதிரியார் இருக்கும் வீடியோ வைரலான நிலையில், தலைமறைவாக இருந்த அவரை இன்று நாகர்கோவிலில் தனிப்படையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ரோ (29). பாதிரியாரான இவர் அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்திற்கு வரும் இளம்பெண்கள், மற்றும் கல்லூரி மாணவிகளிடம் நெருக்கமாக பேசி பழகி அவர்களுடன் வீடியோ சாட்டிங் செய்ததும், நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mDuEgVh
0 Comments