Crime

மதுரை: தென்காசியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தென்காசி இலஞ்சி தென்றல் நகரைச் சேர்ந்தவர் நவீன் பட்டேல். இவர் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது மகள் குருத்திகா. இவரும் தென்காசி கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜன.25-ல் வினித்தும், குருத்திகாவும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த போது நவீன் பட்டேலும், அவரது ஆட்களும் வினித்தை தாக்கி விட்டு குருத்திகாவை கடத்திச் சென்றதாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s1DPjmZ

Post a Comment

0 Comments