
சேலம்: சேலத்தில் அயல்நாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை தகவல் திருட்டுக்காக உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்தவரை உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி நடந்து வருவதாக சென்னை உளவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. குறிப்பாக சேலத்தில் இருந்து அழைபேசி மோசடி நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஐபி அதிகாரிகள் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சேலம், கொண்டலாம்பட்டி, செல்வா நகரில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் பூட்டை அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kCRB90e
0 Comments