
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் ஹரியாணா கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10-வது தெரு, தேனிமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் நேற்று (12-ம் தேதி) அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டன. இதில், கலசப்பாக்கத்தைத் தவிர தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூன்று ஏடிஎம் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. கண்காணிப்பு கேமராக்களை ஸ்பேரே அடித்து மறைத்துள்ளனர். அலாரங்களை செயலிழக்க செய்துள்ளனர். இது குறித்து தனித்தனியே வழக்குகள் பதிவாகின. விசாரணை அதிகாரியாக சம்மந்தப்பட்ட டிஎஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UKQNcYz
0 Comments