
புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி. நகை வியாபாரி. இவரது மனைவி சாரதா (47). கடந்த 6-ம் தேதி குருமூர்த்தி தனது மகன்களுடன் நகைக்கடைக்கு சென்ற நிலையில், வீட்டில் சாரதா மட்டும் இருந்துள்ளார்.
அப்போது வீட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் உள்ள கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள், பொருட்கள், பாத்திரங்கள் என அனைத்தும், முதல் மாடி வரை யும் சேதமடைந்தன. தகவலறிந்த பெரியகடை போலீஸார் நேரில்சென்று சாரதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p9PhZIr
0 Comments