
திருச்சி: திருச்சியில் மேற்கு வங்க இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி, பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் மைலம் மகன் விக்ரம்(34). புத்தூர் அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள உணவகம் உட்பட பல்வேறு உணவகங்களில் கூலி வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் கோட்டை ரயில் நிலையப் பகுதியில் தங்கியிருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த விக்ரமை, 2 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8Sv9QAk
0 Comments