Crime

திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையத்தில் கிளினிக் செயல்படுவதாகவும், அங்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஆட்சியர் சு.வினீத்துக்கு புகார் சென்றது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநர் கனகராணி தலைமையில், திட்ட ஒருங் கிணைப்பாளர் அருண்பாபு, நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், அலுவலக கண்காணிப்பாளர் செ.ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவராக இருந்த அவிநாசியை சேர்ந்த ராஜா (44) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D9mLf4H

Post a Comment

0 Comments