Crime

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலி யூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 10-ம் தேதி போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்றது தெரிய வந்தது. ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மன நலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிர மத்தில் இருந்த ஜபருல்லா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dc5OuC7

Post a Comment

0 Comments