
பூந்தமல்லி: சென்னை, கொரட்டூரில் பல் மருத்துவக் கல்லூரி மாணவரை கொன்ற இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்பு அளித்துள்ளது பூந்தமல்லி-கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் தர்மராஜா தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (27). இவர் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், எம்.டி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ராஜசேகர் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இரவு, சென்னை, கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரி அருகில் தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி வாங்கிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kHBwl2s
0 Comments