Crime

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பத்ரி நாராயணன். அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தனது தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த டிசம்பரில் குடும்பத்துடன் சென்னை வந்தார்.

இந்நிலையில், இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ``உங்களது பான் கார்டுகாலாவதியாகிவிட்டது. அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நிரந்தரமாக காலாவதியாகிவிடும். இதைத் தவிர்க்க உங்கள் செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்க்கை திறந்து கேட்கும் விவரங்களை பதிவிடவும்'' என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FPBRLbG

Post a Comment

0 Comments