Crime

திண்டுக்கல்: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் வீரகாந்தி. இவர் தனது காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் காவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார். இதையடுத்து ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் துறை ரீதியான விசாரணை நடத்த, அப்போதைய ஏடிஎஸ்பி லாவண்யா நியமிக்கப்பட்டார். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண் காவலர் செல்போன் உரையாடல், எஸ்எம்எஸ் ஆகியவற்றை சமர்ப்பித்தார். இதையடுத்து வீரகாந்தி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணை அறிக்கை, விசாகா கமிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FC0fHN8

Post a Comment

0 Comments