Crime

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் எஸ்ஐ-க்களைத் தாக்கிய இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவேரிப்பட்டணத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதையொட்டி பயிற்சி எஸ்ஐ பார்த்திபன், எஸ்ஐ ராஜா, எஸ்எஸ்ஐ பழனியப்பன் ஆகியோர் காவேரிப்பட்டணம் 4 ரோடு விநாயகர் கோயில் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எருது விடும் விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை மது போதையில் இருந்த சிலர் செல்போனில் படம் எடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X7iLDpS

Post a Comment

0 Comments