Crime

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மலையடிகுறிச்சியை சேர்ந்தவர் வேல்துரை (33). இவர், சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயின்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் பணிபுரியும் இடத்துக்கு வந்த ஒருவர், திடீரென வேல்துரையை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கிண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். வேல்துரையை கொலை செய்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவீரபுத்திரன் (37) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். வேல்துரை மனைவியுடன் வீரபுத்திரன் கூடா நட்பில் இருந்து வந்ததாகவும், இந்த விவகாரத்தில் கொலை நடந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VmJgBtF

Post a Comment

0 Comments