Crime

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சீனிவாசன் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து, கலையரசியை மிரட்டினர். பின்னர், பீரோவிலிருந்த 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது கலையரசி வைத்திருந்த மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NVbKtZh

Post a Comment

0 Comments