Crime

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 5-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையின் ஜன்னல் வழியாக வீசியெறிந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் நடந்துள்ளது.

இது குறித்து டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுகான் அளித்த பேட்டியில், "டெல்லியில் உள்ள நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு 5-ம் வகுப்பு படித்து வந்தார் மாணவி வந்தனா. இன்று காலை கீதா தேஷ்வால் என்ற ஆசிரியரால் அவர் தாக்கப்பட்டுள்ளார். அப்போது சக ஆசிரியரான ரியா அந்தச் சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், ஆசிரியர் கீதாவோ சிறுமி வந்தனாவை கத்தரிக்கோலால் தாக்கியதோடு, அவரை ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்துள்ளார். அவர் வீசி எறிவதை வெளியில் இருந்த சிலர் நேரடியாக பார்த்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mUsGYlS

Post a Comment

0 Comments