
மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்த தனசேகரன்-முத்துலட்சுமி தம்பதியரின் இளைய மகன் வினோத்குமார்(23). இவர் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்தார்.
விடுதியில் தனியாக இருந்த வினோத்குமார் நேற்று காலை 10.30 மணி வரை எழுந்திருக்கவில்லை. சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கள்ளிக்குடி போலீஸார் மாணவரின் உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k48z27v
0 Comments