Crime

விருத்தாசலம்: தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்கும் வகையில், கடந்த 2021-22-ம்ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை வாசித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பனை மரங்களை வெட்ட தடை விதித்து,

மிக அவசியான தேவை எனில் ஆட்சியரிடம் உரிய அனுமதிபெற்ற பின்னரே பனைமரங்கள் வெட்ட வேண்டும் என சட்டப் பேரவையில் அறிவித்தார். இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூரில், சேலம் சாலைப் பகுதியில் வளர்ந்திருந்த சுமார் 68 பனை மரங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு வெட்டிச் சாய்க்கப்பட்ட தகவல் வேப்பூர் வட்டாட்சியர் மோகனுக்கு கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZwxPOE4

Post a Comment

0 Comments