
சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி, 1920 முதல் இயங்கிவருகிறது. ஆசியாவிலேயே உடற்கல்விக்கான முதல் கல்லூரி இதுவாகும். இக்கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதியும் உள்ளது.
கல்லூரி முதல்வராக உள்ள ஜார்ஜ் ஆபிரகாம் மீது, முதுநிலை படிக்கும் மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கல்லூரி முதல்வர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: உடற்கல்வியியல் கல்லூரி விடுதியில் தங்கிபயிற்சி மேற்கொண்டு வரும் முதுநிலை மாணவிக்கு உதவி செய்வதுபோல பேசி, மாணவியின் செல்போன் எண்ணை கல்லூரி முதல்வர் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7ElOPdG
0 Comments