Crime

பெரியகுளம்: தேனி மக்களவை உறுப்பினர் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் தன்னை மிரட்டி, அடித்துத் துன்புறுத்தி வழக்கில் சேர்த்ததாகவும் இது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை மலையடிவாரத்தில் மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. செப்.28-ம் தேதி இங்குள்ள மின்வேலியில் சிக்கி சிறுத்தை இறந்து கிடந்தது. இதனை அவசரஅவசரமாக பிரேதப் பரிசோதனை செய்து அப்பகுதியில் புதைத்த வனத் துறையினர் மறுநாளே இத்தகவலை தெரிவித்தனர். இது வனஉயிரின ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அத்தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன்(36) என்பவரை வனத் துறையினர் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F6KMdHu

Post a Comment

0 Comments