Crime

கொப்பள்: கர்நாடக மாநிலத்தில் 16 வயது சிறுவனை ஆடையின்றி வழிபாடு செய்யுமாறு மூவர் துன்புறுத்தியுள்ளனர். அதோடு அதனை வீடியோவாக செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் அந்த மாநிலத்தின் கொப்பள் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆடையின்றி கடவுளை வணங்கினால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் மற்றும் கடன் பிரச்சினைகள் தீரும் என அந்தச் சிறுவனை மூவரும் நம்பவைத்து, இந்தச் செயலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wiuZG6s

Post a Comment

0 Comments