Crime

கோவை: கோவையில் சாலையின் நடுவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை வெரைட்டிஹால் சாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர், கடந்த 2-ம் தேதி இரவு வழக்கம் போல் தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியா வந்தது. அதில், நள்ளிரவு நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடு சாலையில் கேக் வைத்து, அதை பட்டா கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f8TrHWC

Post a Comment

0 Comments