Crime

சென்னை: தம்பியை கொலை செய்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிக்குப் பழியாக ரவுடியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்தவர் சேட்டு என்ற கார்த்திகேயன் (33). பேசின் பாலம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 30-ம் தேதி இரவு காந்தி நகர் பொதுக்கழிப்பிடம் அருகே கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று, கார்த்திகேயனை கொலை செய்துவிட்டு தப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LQPhcTy

Post a Comment

0 Comments