Crime

மும்பை: மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அனீஸ் அன்சாரி(32) என்ற கம்ப்யூட்டர் இன்ஜினீயர் பணியாற்றினார். இவர் அலுவலகத்தின் கம்ப்யூட்டர்கள் மற்றும் இன்டர்நெட் இணைப்பை தவறாக பயன்படுத்தி, அமெரிக்காவைச் சேர்ந்த உமர் எல்ஹாஜி என்பவருடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டார்.

எல்ஹாஜியுடன் ஐ.எஸ் தீவிர வாத அமைப்பின் கொள்கைகளை பகிர்ந்தார். மும்பைபாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள அமெரிக்கன் பள்ளியில், தனிநபராக வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அங்கு பயிலும் வெளிநாட்டினரின் குழந்தைகளை கொல்லவும் சதி திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக இவர் தெர்மைட் வெடிகுண்டு தயாரிக்கும் தகவல்களையும் திரட்டினார். சைபர் தீவிரவாத குற்றத்தில் ஈடுபட்டதற்காக இவர் 2014 அக்டோபர் 18-ம் தேதியில் இருந்து சிறையில் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ca7EbDH

Post a Comment

0 Comments