Crime

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். நகைகளுக்காக கொல்லப்பட்டனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அடுத்த பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி மனைவி கண்ணகி (50). கலைமணி மனைவி மலர்விழி (29). இருவரும் அருகே உள்ள தைலமரக்காட்டில் உணவு காளான்கள் பறிக்க இன்று (அக்.22) காலை சைக்கிளில் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளோர் மலர்விழிக்கு போன் செய்து பார்த்துள்ளனர். அப்போது, போன் சுவிட்ச் ஆஃப் என கூறியதையடுத்து, அவர்கள் சென்ற பகுதிக்கு குடும்பத்தார் சென்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YekM538

Post a Comment

0 Comments