
ஹசாரிபாக்: மாதத் தவணையில் வாங்கிய டிராக்டருக்கு முறையாக இ.எம்.ஐ செலுத்தாத விவசாயி ஒருவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய தனியார் நிதி நிறுவனம் சென்றுள்ளது. அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியபோது, மறியல் செய்த விவசாயியின் கர்ப்பிணி மகள் மீது வாகனத்தை மீட்க சென்று முகவர் டிராக்டரை இயக்கியதில், அந்தப் பெண் உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் நடந்துள்ளது. அந்த விவசாயிக்கு மஹிந்திரா தனியார் நிதி நிறுவனம் தவணை தொகையில் கடன் வழங்கியுள்ளது. அந்த விவசாயி மாற்றுத் திறனாளி எனத் தெரிகிறது. ஆனால், அவர் கடன் தவணையை முறையாக திரும்ப செலுத்த தவறியுள்ளார். சுமார் 1,20,000 ரூபாய் அவர் செலுத்த வேண்டும் எனத் தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h41BNFQ
0 Comments