Crime

புதுச்சேரி: புதுச்சேரியில் வாடகை வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த புரோக்கர் உள்ளிட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மோகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கோரிமேடு டிநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13-ம் தேதி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 பேரை பிடித்த போலீஸார், இளம்பெண் ஒருவரையும் மீட்டனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த புரோக்கர் பால்ராஜ் (எ) பாலாஜி, வாடிக்கையாளராக வந்திருந்த புதுச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9ijDxAd

Post a Comment

0 Comments