Crime

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை, காட்பாடா மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜஹான் (47). இவர் தனது முதல் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தோல் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரது நிறுவனத்தில் டெய்லராக பணி செய்த ஹசீனா பேகம் (37) என்பவரை 2016-ல்2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவரை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் கார்டன் 6-வது சந்து பகுதியில் வாடகை வீட்டில் தங்க வைத்திருந்தார். அவ்வப்போது ஹசீனா பேகம் வீட்டுக்குச் சென்று தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், ஷாஜஹான் கடந்த 27-ம் தேதி இரவு ஹசீனாபேகத்தின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், மறுநாள் காலை ஹசீனாபேகம் இறந்து கிடந்ததாக வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், ஹசீனா பேகத்தின் தாயார், தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனப் புகார் தெரிவித்தார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸார் இயற்கைக்கு மாறானமரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில்,ஹசீனா பேகம் மூச்சடைக்கப்பட்டும், உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டும் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aFvlObo

Post a Comment

0 Comments