
சேலம்: சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி, முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த புகாரில் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பாலசுப்பிரமணியம். இவர், தனது நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் ஓராண்டில் மொத்தம் ரூ.2.60 லட்சம் வழங்கப்படும் என்று கூறி விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை நம்பி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். அவர்களில் பலருக்கும் சில மாதங்கள்வரை விளம்பரத்தில் குறிப்பிட்டபடி, முதலீட்டுக்கு ஏற்ப பணம்வழங்கப்பட்ட நிலையில், பின்னர் வழங்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YOEapIV
0 Comments