
கோவை: திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கோவையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமஜெயம். இவர், தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர். 2012 மார்ச் 29-ல் திருச்சி அருகே கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலை என்ற இடத்தில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருச்சி போலீஸார் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கும் பின்னர் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. அதன்பிறகும் கொலையாளிகளை கண்டறிய முடியாததால், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UmnkcfD
0 Comments