
ராஞ்சி: ஜார்க்கண்டில் சக கைதியை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் மத்திய சிறை உள்ளது. அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இரு குழுக்களிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கிழக்கு சிங்பும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிந்ததால், நீதிபதி ராஜேந்திர குமார் சின்ஹா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uJKQCx2
0 Comments