Crime

சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக, செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டிலிருந்து 3.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கொள்ளை வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம், ரசாக்கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் கடந்த 13-ம்தேதி கொள்ளை போனது. பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, வங்கி ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு, இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. 31.7 கிலோதங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yUloAFK

Post a Comment

0 Comments