
விழுப்புரம்: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிபிசி ஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் உயிரிழந் தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலை யில், கடந்த 17-ம் தேதி அந்தப் பள்ளியில் பெரும் கலவரம் வெடித் தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக் கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5E8oFTR
0 Comments