
புதுடெல்லி: மாநிலங்களுக்கு இடையே 7 லட்சம் எண்ணிக்கையால் ஆன போதை மாத்திரை, மருந்துகள், ஊசிகளை கடத்தியதாக ஒருவரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரகசியத் தகவலின் பேரில் உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டவிரோத கிடங்கில் நேற்று முன்தினம் பஞ்சாப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 7 லட்சம் போதை மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், ஊசிகள், ஒப்பியாட்ஸ் எனப்படும் போதைப்பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NMAGYZr
0 Comments