
மும்பையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக திருவாரூரைச் சேர்ந்த 2 பேரை மும்பை போலீஸார் நேற்று முன்தினம் திருவாரூரில் கைது செய்தனர்.
திருவாரூரில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஹாஜி. மேலும், ரகசியமாக தங்கக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர், தனது நண்பரான திருவாரூர் மஜித்தோப்பைச் சேர்ந்த அவுரங்கசீப்பை, சென்னையில் ஒரு செல்போன் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டதுடன், அவரையும் தனது தங்கக் கடத்தல் தொழிலில் ஈடுபட செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5G3HZyW
0 Comments