Crime

வேலூர்: வேலூர் ஓல்டுடவுன் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (37). பெயின்டர். இவரது நண்பர் வசந்தபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த முன்னா என்கிற அகேஷா (37). இவர் மீது ஏற்கெனவே வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருவரும் நண்பர்கள் என்பதால் முன்னாவின் வீட்டுக்கு மணிகண்டன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது, முன்னாவின் மனைவியுடன் மணிகண்டனுக்கு கூடாநட்பு ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்துகொண்ட முன்னா, நண்பர் மணிகண்டனை கண்டித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qa71Rdy

Post a Comment

0 Comments